தனஞ்ஜிய டி சில்வாவின் சமூக வலைத்தளத்தின் மீது சைபர் தாக்குதல்



 எம் .ஜே பஸ்லின்


இலங்கை கிரிக்கெட் அணி வீரரான தனஞ்ஜிய டி சில்வாவின் சமூக வலைத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தனது இன்ஸ்ராகிராம் கணக்கில் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தனஞ்ஜிய டி சில்வா தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த தகவலை கூறியுள்ளார்.


தனது கணக்கின் ஊடாக இடையூறுகள் ஏற்பட்டிருப்பின், மன்னிப்பு கோருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.