அக்கரைப்பற்று #தொழில் #நுட்பக் #கல்லூரி #தேசிய #நிகழ்வில் #விருதினை #பெற்றுக் #கொண்டது.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற National Vocational Training Excellence Award 2020 ற்க்கான விருதினை அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி பெற்றுக்கொண்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல தொழில் நுட்பக் கல்லூரிகளுள்ளும் முதலாவது இடத்தினையும், ஏனைய பயிற்ச்சி நிறுவனங்களுள் இரண்டாம் இடத்தினையும் அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி பெற்றமைக்காக இவ் தேசிய விருது வழங்கப்பட்டது.
இவ் விருதானது, கல்லூரியின் கல்வி, கல்வி சாரா, பெளதீக மேம்பாட்டின் அடைவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரியை தலைமையேற்று வழிநாடத்திய அதிபர் எம். சோமசூரியம், பெளதீக மற்றும் வெளிக்கள செயற்பாடுகளை கச்சிதமாக நிறைவேற்றிய பதிவாளர் ஐ. பியாஸ், கல்விசார் செயற்பாடுகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்க உழைத்த கல்விசார் அணியினர்,
மாணவர் ஆட்சேர்ப்பு, பயிற்ச்சி, தொழில் சார் நிறுவனங்களுடனான இணைப்பு வேலைகளை மேற்கொண்ட வழிகாட்டல் ஆலோசனை நிலையம்,
ஏனைய செயற்பாடுகளை செய்த உத்தியோகத்தர்கள்,
எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை வழங்கிக் கொண்டிருக்கும் தனவந்தர்கள் அனைவரும் பாராட்டுக்கும் நன்றிக்குமுரியவர்கள்.
இதே வேளை, எம்மை வழிநடாத்திய பணிப்பாளர் நாயகம் திருமதி புஷ்பா மலலசேகர, பணிப்பாளர் திரு. தேசப்பிரிய உள்ளிட்ட அனைவரும் நன்றிக்குரியவர்கள்.
ஊடக பிரிவு
தொழில்நுட்ப கல்லூரி
அக்கரைப்பற்று.
2
Post a Comment
Post a Comment