கரோலின் ஜுரி பிணையில் செல்ல அனுமதி


 


"திருமதி இலங்கை" அழகு ராணி போட்டியின் போது வெற்றி பெற்ற புஷ்பிகா டி செல்வாவிடம் இருந்து மேடையிலேயே கிரீடத்தைப் பறித்த திருமதி உலகராணி கரோலின் ஜுரி கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

திருமதி உலக அழகு ராணியான கரோலின் ஜுரி இன்று பிற்பகல் கறுவாத்தோட்டம் போலீஸாரினால் கைது செய்யப்பட்டதாகவும், சிறு காயங்களை உண்டாக்குதல், வன்முறை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருப்பதாக காவல்துறை டிஐஜி அஜித் ரோஹனா கூறினார்.

மேலும், பிரபல அழகு கலை நிபுணரான சூலா பத்மேந்திரவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வரும் 19-ஆம் தேதி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருப்பதாக அஜித் ரோஹனா கூறியுள்ளார்.