COVID19LK உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளது


 


நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 600 ஐக் கடந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் மேலும் நான்கு உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.



இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 394 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.