நுவரெலியா மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா வைரஸ்



 (க.கிஷாந்தன்)

 

நுவரெலியா மாவட்டத்தில் நேற்றைய தினமும் (05.05.2021) 24 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 

இதன்படி நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேருக்கும், கந்தபளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், தெரிபா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவருக்கும், மத்துரட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நால்வருக்கும், பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.

 

அதேவேளை, கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்று வரை (2ஆவது அலை) நுவரெலியா மாவட்டத்தில் ஆயிரத்து 757 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

 

2020 மார்ச் மாதம் முதல் நேற்று வரை மொத்தமாக 2 ஆயிரத்து 80 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. (முதலாம், இரண்டாம், மூன்றாம் அலைகள்)