மருதமுனை,ஹம்றா வீதி விடொன்றில் தோட்டாக்கள் மீட்பு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



வீடொன்றில் இருந்து 15 துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பொதி ஒன்றினை கல்முனை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை 5 ஆம் கிராமசேவகர் பிரிவு அல்-ஹம்றா வீதியில்  உள்ள வீடொன்றின் கூரையில் எம்-16 துப்பாக்கிக்கு பயன்படுத்தும் தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்ட வீட்டு உரிமையாளர் தற்போது கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

இன்று(7) மதியம் கல்முனை பொலிஸ் விசேட பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றதுடன் அவ்வீட்டில் இருந்து 54 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரும் கைதாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.