பொத்துவில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது



யாழ்ப்பாணம், அம்பாறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட மேலும், சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.


குறித்த பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


அத்துடன், அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவு  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும், கொழும்பு மாவட்டம் பிலியந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்போவில வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கரதியான கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.