நாடளாவிய ரீதியில் இரவு நேர ஊரடங்கு அமுல்



நாளை (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.


மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கு இது பொருந்தாது எனவும் அவர் கூறினார்.