4 கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு



பாறுக் ஷிஹான்(
ෆාරුක් සිහාන්)



வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அம்பாறை மாவட்டம்  கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில்  இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது

வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக்குஞ்சு  பிறந்துள்ளது.

 மேலும் ஏழு கோழிக்குஞ்சுகள் பிறந்துள்ள நிலையில் அதில் ஒன்றே இவ்வாறு பிறந்துள்ளது என வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். இந்த கோழிக்குஞ்சை பார்வையிட அயலவர்கள் ஆவலுடன் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.