மழையால் வந்தது மண் சரிவு: விளைவு 11 பேர் பலி



 


இவ்வாறான பின்னணியிலேயே, இன்றைய தினம் மண்மேடு சரிந்து குறித்த வீட்டின் மீது வீழ்ந்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.


மற்றுமொரு மண்சரிவு

குருநாகல் - நாரம்மல பகுதியில் இன்று மற்றுமொரு வீட்டின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.


கடும் மழையுடனான வானிலை நிலவிய தருணத்திலேயே, வீட்டின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.


மண்மேடு சரிந்து விழும் சந்தர்ப்பத்தில் வீட்டில் தாய், மகன் மற்றும் மகள் ஆகியோர் இருந்துள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.


எனினும், சம்பவத்தில் தாயும், மகனும் உயிர் தப்பியுள்ளதுடன், மகள் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.


இலங்கையில் மழையால் மண்சரிவு

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

சம்பவத்தில் காயமடைந்த யுவதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் தாதியாக கடமையாற்றும் 23 வயதான யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பகுதிகள் குறித்து ஏற்கனவே அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும், மக்கள் அது குறித்து அக்கறை கொள்வதில்லை என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.


இலங்கையில் மழையால் மண்சரிவு

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

மண்சரிவு அபாயம் காணப்படுகின்ற பெரும்பாலான பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மக்கள் அது குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கின்றது.


இதற்கு முன்னர் ஏற்பட்ட மண்சரிவுகள்

கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க பகுதியில் 2016ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டிருந்தது.


இந்த மண்சரிவில் சுமார் 30 பேரில் சடலங்கள் மாத்திரமே மீட்கப்பட்ட போதிலும், 150திற்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்ததாக அரசாங்கம் அறிவித்திருந்தது.


நூற்றுக்கணக்கானோரின் சடலங்களை மீட்காது, மீட்புப் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தன.


பதுளை மாவட்டத்தின் கொஸ்லந்த பகுதியில் 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருந்த நிலையில், சிலரது சடலங்கள் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டிருந்தன.


ஏனைய நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதையுண்டிருக்கலாம் என அறிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.