ஆலையடிவேம்பில்,60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி நாளை




 


வி.சுகிர்தகுமார் 0777113659 



இரு தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் தடுப்பூசி நாளை முதல் வழங்கப்படும் என ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னர் இரு தடுப்பூசியினையும் ஏற்றிக்கொண்டவர்களுக்கு மாத்திரமே குறித்த மூன்றாவது தடுப்பூசி ஏற்றப்படும் எனவும் கூறினார்.
அதாவது இரு தடுப்பூசியினை ஏற்றி மூன்று மாதங்கள் முடிவடைந்தவர்களுக்கு மாத்திரம் பைசர் தடுப்பூசி வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் கோளாவில் வைத்திய சிகிச்சை நிலையத்திலும் நாளை (29)காலை 8 மணிமுதல் நண்பகல் 1 மணிவரை இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆகவே 60 வயதிற்குமேற்பட்ட இரு தடுப்பூசியினை ஏற்றி மூன்று மாதத்தினை பூர்த்தி செய்தவர்கள் மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டு கொரோனா தொற்றிலிருந்து விடுபடுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.