இலங்கையில் 75 புதிய ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள்




 


இலங்கையில் 75 புதிய ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவிற்கு கிடைக்கப் பெற்ற 180 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே, இந்த 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.