"கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றபோது பொதுமக்கள் தவறாமல் ஒத்துழைக்க வேண்டும்'.




 



பாறுக் ஷிஹான்(
ෆාරුක් සිහාන්)




கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றபோது பொதுமக்கள் தவறாமல் ஒத்துழைக்க வேண்டும். எமது மக்கள் ஒத்துழைக்கின்றபோது மீண்டும் எமது பிராந்தியம் கொரோனா தடுப்பு, ஒழிப்பு நடவடிக்கைகளில் வெற்றி கொடி நாட்ட முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தேசிய கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் பணியின் ஒரு வருட பூர்த்தி நாள் நிகழ்வு சனிக்கிழமை (29) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் தேசிய கொடியேற்றலுடன் கல்முனை பிராந்தியத்தின் பிரதான நிகழ்வு வைத்திய கலாநிதி றிபாஸின் தலைமையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்

விஞ்ஞான ரீதியாக துறை சார்ந்த நிபுணர்கள் சொல்வதை நம்பி செயற்பட்டு கொரோனா தடுப்புஇ தவிர்ப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.தேசிய மட்டத்தில் மட்டும் அல்ல, சர்வதேச மட்டத்திலும் மிக சிறந்த இயங்கு திறன் நிறைந்த நிர்வாக கட்டமைப்பை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கொண்டு அற்புதமாக இயங்கி வருகின்றது.

முன்னாள் பணிப்பாளர் நண்பர் வைத்திய கலாநிதி ஜி. சுகுணன் விட்டு சென்ற இடத்தில் இருந்து தொடங்கி இன்னமும் மேலதிகமாக எனது சேவைகளை திறம்பட முன்னெடுப்பேன் என்று இத்தருணத்தில் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

கொரோனா என்றால் மக்கள் அலறி அடித்த காலம் இப்போது மாறி விட்டது. அதன் பேராபத்தை மக்கள் மறந்து விட்டனர். அதை தடுக்கவும் தவிர்க்கவும் செய்ய வேண்டிய அடிப்படை விடயங்கள் சிலவற்றைகூட செய்ய தவறுகின்றனர்