காரைதீவு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு கொரோனா




 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

புதன்கிழமை (19)அதிகாலை காய்ச்சல் இருப்பதையுணர்ந்த தவிசாளர் காரைதீவு சுகாதார வைதத்திய அதிகாரி பணிமனையுடன் தொடர்புகொண்டு அன்ரிஜன் செய்யவேண்டி ஆலோசனையைகேட்டார்.


 
அதன்படி சிரேஸ்ட பொதுச்சுகாதாரபரிசோதகர் சா.வேல்முருகு தலைமையிலான குழுவினர்  தவிசாளரது வீட்டிற்கு சென்றுஎ அன்ரிஜன் சோதனையை மேற்கொண்டனர்.

அதன்படி தவிசாளர் அவரது மனைவி மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதனையடுத்து அவர் குடும்பத்தோடு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அவரும் அவரது மனைவியும் ஏலவே இரண்டு வக்சீன்களையும் பெற்றுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


--

Thanks & Best Regards,

பாறுக் ஷிஹான்