கௌரவ நீதிபதிகளுக்கான வருடாந்த இடமாற்றங்கள் 2022




இலங்கை நீதிச் சேவை ஆணைக்குழுவினால்,117 நீதிபதிகளுக்கான வருடாந்த இடமாற்றங்கள் 2022. 04.02 ந் திகதி  முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான பெய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் சில.

மல்லாகம் மாவட்டட நீதிமன்றின் கௌரவ நீதிபதி திரு அலக்ஸ்ராஜா, பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றின் நீதிபதிபதியாகக் கடமை புரியவுள்ளார்.மன்னார் மாவட்ட கெளரவ நீதிபதி  திரு.சிவகுமார் மல்லாகம் மாவட்ட நீதிபதியாக பணிபுரியவுள்ளார்..

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிபதியாக, கௌரவ பீற்றர் போல் அவரகளும், மட்டக்களப்பு மாவட்ட கௌரவ நீதிபதியாக பசீல் அவரகளும் வாழைச்சேனை நீதிமன்றின் கௌரவ நீதிபதியாக, திரு. கருணாகரன் அவர்களும் கடைமையேற்கவுள்ளனர்.மட்டக்களப்பு மேலதிக நீதவான் திருமதி ஜீவராணி பண்டாரவளை நீதிமன்றில் கடமை புரியவுள்ளார்.

பொத்துவில் நீதிமன்றின் கௌரவ நீதிபதியாக, ஜனாப் றிஸ்வான் அவர்கள் கடையேற்கவுள்ளார். பொத்துவில் நீதிமன்ற கௌரவ நீதிபதி  ஜனாப் றாபிஈ கண்டி நீதிமன்ற மேலதிக நீதவானாக கடமையேற்கவுள்ளார்.