சுகபோக வாழ்க்கைக்காக அமைச்சு பதவிகளை ஏற்று பந்தா காட்டுவதற்கு நாம் தயாரில்லை




 (


க.கிஷாந்தன்)

" பெருந்தோட்டத் தொழிலாளர்கள்  கட்சி மற்றும் தொழிற்சங்க பேதமின்றி ஒற்றுமையாக செயற்பட்டால் தோட்டக் கம்பனிகளை நிச்சயம் அடிபணிய வைக்கலாம். இதற்கு சிறந்த சான்று, மஸ்கெலியாவில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை போராட்டமாகும்."  - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அத்துடன், தோட்டத் தொழிலாளர்களை, சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி அவர்களை முதலாளியாக்குவதே தனது இலக்கு எனவும், சஜித் தலைமையில் மலரும் புதிய ஆட்சியில் இந்த இலக்கு அடையப்படும் எனவும் அவர் கூறினார்.

பத்தனை, தலவாக்கலை, லிந்துலை ஆகிய பிரதேசங்களில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர்களுடான சந்திப்பு கூட்டம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் இன்று (02.10.2022) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.உதயகுமார், நிதி செயலாளர் சோ.ஸ்ரீதரன், தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன், பிரதி தேசிய அமைப்பாளர் கல்யாணகுமார், உப தலைவர்களான வேலு சிவாநந்தன், இராஜமாணிக்கம், நிர்வாக பணிப்பாளர் அழகமுத்து நந்தகுமார் உட்பட உயர்பீட உறுப்பினர்கள் கட்சி முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே திகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

" இன்பமோ, துன்பமோ என்றும் நாம் மக்கள் பக்கமே நிற்போம். அரசியலுக்கு வந்தது முதல் இன்றுவரை மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதாலேயே மக்கள் பேராதரவை வழங்கி வருகின்றனர்.  மக்களுக்கு சேவையாற்ற முடியாத எந்தவொரு பதவியும் எமக்கு வேண்டாம். சுகபோக வாழ்க்கைக்காக அமைச்சு பதவிகளை ஏற்று பந்தா காட்டுவதற்கு நாம் தயாரில்லை.

ரணில் விக்கிரமசிங்க