ஆலம் குளம் பகுதியில், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது





 FAROOK SIHAN


ஐஸ் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த   சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து ஞாயிற்றுக்கிழமை (7) மாலை  அக்கரைப்பற்று    பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை ஆளங்குளம்  வீதியில்   வைத்து   சந்தேக நபர்    விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் அட்டாளைச்சேனை 5 பகுதியை சேர்ந்த  73 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 9 கிராம் 880 மில்லிகிராம் உட்பட  சந்தேக நபர்  பாவித்த கைத்தொலைபேசி  என்பன  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது   விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய அம்பாறை வலயக்கட்டளை அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  சில்வெஸ்டர் விஜேசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய  அம்பாறை மாவட்ட பதில் கட்டளை அதிகாரியும் மட்டக்களப்பு மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகருமான  நளீன் பெரேரா ஆகியோரின் வழிகாட்டலில் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம்   பொறுப்பதிகாரியும்  பொலிஸ் பரிசோதகருமான  ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க மேற்பார்வையில்   உப பொலிஸ் பரிசோதகர்   எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க  உள்ளிட்ட பொலிஸ் சார்ஜன்ட்  பண்டார (13443)    பொலிஸ் கன்டபிள்களான ராஜபக்ஸ  (24812) அபேரட்ன (75812) நிமேஸ்(90699) பியுமக (94143) சாரதி குணபால (19401) அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்தனர்.
   
 பின்னர்  கைது செய்யப்பட்ட நபர்கள்  சான்று பொருட்களுடன் அக்கரைப்பற்று  பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.