களுவாஞ்சிக்குடி முன்மாதிரியான குருதிக்கொடை நிகழ்வு




 ( வி.ரி.சகாதேவராஜா)


மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின்  ஏற்பாட்டில் வருடாந்தம் ஒழுங்குசெய்து நடாத்தப்படும்  இரத்ததான நிகழ்வானது இவ் வருடம்  5வது தடவையாக சிறப்பான முறையில் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. 

களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன்   இணைந்து ஏற்பாடு செய்த இரத்ததான நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம்  தலைமை  மற்றும் வழிகாட்டுதலில்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

பிரதேச செயலக  உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்கள், இளைஞர்  கழகங்கள் , கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள் மற்றும்  பொதுமக்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் இவ் உன்னதமான நிகழ்வில் கலந்துகொண்டு குருதிக்கொடை வழங்கினர் .

இவ் இரத்ததான நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமை மற்றும் வழிகாட்டுதலில் பிரதேச செயலக  நலன்புரிச் சங்கத்தினரின் ஒத்துழைப்புடன்  தொடர்ச்சியாக 5வது தடவையாக இடம்பெறுகின்றமை  குறிப்பிடத்தக்கதாகும்.