(நூருல் ஹுதா உமர்)
காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம நிலதாரிகளுக்கான காணி நிர்வாகம் தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் வியாழக்கிழமை இடம்பெற்றது.
இன்நிகழ்வில் அம்பாரை மாவட்ட காணி உத்தியோகத்தர் கே.எல். முஹம்மட் முஸம்மில் வளவாளராக கலந்து கொண்டு காணி நிர்வாகம் தொடர்பான விளக்கத்தை வழங்கினார். இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம். பார்த்திபன், காரைதீவு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்கள் , காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment