வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தில்




 


வி.சுகிர்தகுமார் 0777113659 



ஸ்ரீ ராம்ஜி சுவாமிகளின் மஹா சமாதியும் ஆத்மலிங்கப் பிரதிஷ்டத்தையும் அக்கரைப்பற்று வாச்சிக்குடா பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தில் இம்மாதம் 17ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இவ்விசேட பூஜையானது ஆலயத்தில் சற்குருவாக இருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் காயத்திரி சித்தர் டாக்டர் ஆர்.கே.முருகேசு சுவாமிகளின் பரிபூரண ஆசிர்வாதத்துடன் காலை 9.38 மணிமுதல் 10.28 மணிவரையுள்ள அபரபட்ச திதியும் உத்தராட நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபநேரத்தில்; நடைபெறவுள்ளது.
இதன்போது ராம்ஜி; சுவாமிகளின் மகாசமாதியும் ஆத்மலிங்க பிரதிட்சையும் ஸ்தூபி அபிசேகமும் நடைபெற்று குருவாசியும் அருளாசியும் வழங்கப்படுவதுடன் அடியவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
16ஆம் திகதி வாஸ்து சாந்தி மற்றும் கிரியைகளுடன் ஆரம்பமாகி யாக மண்டப பூஜையும் இடம்பெறும். 17 ஆம் திகதி காலை 6 மணிமுதல் பூஜைகள் ஆரம்பமாகி ஸ்ரீ ராம்ஜி சுவாமிகளின் மஹா சமாதி பிரதிஸ்டையும்; ஆத்மலிங்கப் பிரதிஷ்டத்தையும் தூபி அபிசேகம் நடைபெற்று அடியவர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படும்.
கிரியைகள் யாவற்றியும் பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரின் அருளாசியும் குருவாசியும் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிருவாகத்தினர் அழைக்கின்றனர்.
ஆலய பரிபாலகர் நல்லதம்பி கந்தசாமி அவர்களின் தலைமையில் இடம்பெறும் கிரியைகள் யாவற்றையும் கிரியாகலாநிதி வித்தியாசாதகர் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ணிய கிருஸ்ணகுமாரக்குருக்கள் தலைமையில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ த.குகனேஸ்வர சர்மா ஆகியோர் நடாத்தி வைக்கவுள்ளனர்.