சாதாரணதர பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியம்




 


2022 கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை பிற்போடுவதற்கான சாத்தியமுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் தாமதமடைவதே இதற்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரணதர பரீட்சைக்கான திகதியை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.