முன்னாள் எம்பி பியசேன அகால மரணம்




 


#Rep/Sukirthakumar.
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்(2010-2015) கல்முனை வடக்கு வைத்தியசாலையில் இன்று காலமானார்.
இறக்கும் போது இவருக்கு வயது (61).

.சுகிர்தகுமார் 0777113659 
  அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்
இன்று காலை 7.30 மணியளவில் அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பொதுமயானத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த அவர் மயானத்தில் பக்கம் திரும்ப முனைகையில் பொத்துவில் பிரதேசத்தில் இருந்து பொலநறுவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ்சில் மோதுண்ட நிலையில் இவ்விபத்து இடம்பெறுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்தவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்கரைப்பற்று பொலிசார் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வழமையாக இவர் மயானங்களுக்கு சென்று துப்பரவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.