முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று



 


(வி.ரி. சகாதேவராஜா)


2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் இன்று 27 ஆம் தேதி திங்கட்கிழமை ஆரம்ப மாகவுள்ளது.

முதலாம் தவணை இன்று 27 ஆம் தேதி திங்கட்கிழமை ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி நிறைவடைகிறது.

முதலாம் தவணை பாடசாலை விடுமுறைகள் ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, தற்போது நோன்பு விடுமுறையிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதற்கட்டம் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 12ஆம் திகதி நிறைவடைகிறது.
 இரண்டாம்கட்டம் மே மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகி யூலை மாதம் 20ஆம் திகதி நிறைவடைகிறது.

இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக மே 13 முதல் 24 வரை மீண்டும் விடுமுறை அளிக்கப்படும் என அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சை காரணமாக இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 14 முதல் நவம்பர் 12 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணை விடுமுறை டிசம்பர் 23 முதல் 2024 ஜனவரி 1 வரை வழங்கப்படவுள்ளன.