இந்தப் பாடசாலையின் பௌதீக வள நிலைமை மிகவும் கவலையானதுததான். அதற்கான வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறோம். பாடசாலையின் அபிவிருத்திக்கு சமூகத்தின் பங்களிப்பு மிகவும் அவசியமாக இருக்கின்றது. வடக்கில் தமிழ் சமூகம் தனியே அரச நிதியை மாத்திரம் நம்பியிருப்பதில்லை. புலம்பெயர் தமிழர்கள் மற்றும் நலன்விரும்பிகளின் ஒத்துழைப்போடு பாடசாலைகளுக்கான வளங்களைப் பெற்று அபிவிருத்தி செய்திருக்கிறார்கள். அதேபோன்று எமது முஸ்லிம் சமூகத்தின் அபிமானிகளும் தங்களது பிரதேசங்களின் பாடசாலைகளின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
பெற்றோர்களின் பங்களிப்பு இருக்குமானால் தனியே அரச நிதியை மாத்திரம் நம்பியிருக்காமல் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக பௌதீக வளங்களையும் கூட நாங்கள் விருத்தி செய்ய முடியும். அரசியல் சக்திகளின் உதவிகளைப் பெறுவதற்கு முயற்சி செய்கின்ற அதேவேளை அதற்கு அப்பால் நாங்கள் ஒன்றுபட்டால் நிதியை வெளியிடங்களில் இருந்து பெறமுடியுமாக இருந்தால் அவ்வாறான பௌதீக வசதிகளையும் எமது பாடசாலைகளில் ஏற்படுத்த முடியும்.
ஒரு பாடசாலை அமையப் பெறுவது 100 சிறைக்கூடங்கள் மூடப்படுவதற்கு சமானாகும் என்ற அறிஞரொருவரின் கருத்து இருக்கிறது. கல்விதான் சமூகத்தின் மிகபப் பெரியதொரு ஆயுதம். இப்பாடசாலை அமைந்திருப்பது மீனவப் பிரதேசமாக இருந்தாலும் அச் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு இந்தப் பாடசாலை என்றும் ஒத்துழைப்போடு இருக்கும் என்று நம்புகிறோம்.
அச் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு இந்தப் பாடசாலை என்றும் ஒத்துழைப்போடு இருக்கும் என்று நம்புகிறோம்.


Post a Comment
Post a Comment