க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌ல் விசார‌ணையை நீதியாக முன்னெடுக்க வேண்டும்




 


க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌ல்  விசார‌ணையை நீதியாக முன்னெடுக்க   க‌ல்முனை முதல்வர்  பிர‌தி முதல்வர் ப‌த‌வி விலக வேண்டும்  என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தெரிவித்துள்ள‌து.


க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ஊழ‌ல் தொடர்பில்   அக்க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி  கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(5) இரவு  நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது 


ம‌ஹிந்த‌ கோட்டா ஆட்சியில் ஊழ‌ல் ந‌ட‌ந்த‌ போது ம‌ஹிந்த‌, கோட்டா பொறுப்ப‌ல்ல‌, நிர்வாக‌ உத்தியோக‌த்த‌ர்க‌ள்தான் பொறுப்பு என‌ யாரும் சொல்லவில்லை. மாறாக‌ அவ‌ரின் க‌ட்சி, அவ‌ரின் க‌ட்சிக்கு பாராளும‌ன்றில் ஆத‌ர‌வு கொடுத்த‌ க‌ட்சிக‌ள் என‌ அனைவ‌ரையும் ந‌ம் ச‌மூக‌மும் சேர்ந்து குற்ற‌ம் சும‌த்திய‌து.