மரம் நடுகை நிகழ்வு



 


நூருல் ஹுதா உமர்


சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் சாய்ந்தமருது பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தில் இன்று (06) மரம் நடுகை நிகழ்வு கலாச்சார மத்திய நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி யு.கே.எம். றிம்சான் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் கலந்து கொண்டதோடு அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி  பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட்,  கணக்காளர்  ஏ.ஜே.நுஸ்ரத் பானு, நிருவாக  உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பழீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர்,  பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம்.எம்.சமூன்,  நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட்,  பிரதேச செயலக கலாசார பிரிவின் கலாசார உத்தியோகத்தர் எஸ்.சுரேஷ் குமார், கலாசார உத்தியோகத்தர் ஏ.எச்.சபீக்கா மற்றும் கலாச்சார பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.சத்தியவதி மற்றும் கலாசார மத்திய நிலையத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து  கொண்டனர்