தாதிய பயிற்சி மாணவர்களிற்கான ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி பட்டறை





நூருல் ஹுதா உமர்

தன் நம்பிக்கையுள்ள இளைஞர், யுவதிகளினை உருவாக்கல் எனும்  தொனிப்பொருளைக் அடிப்படையாக கொண்டு  கடந்த (14) ஞாயிற்றுகிழமை வாழைச்சேனை தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் H&D தாதியர் பாடசாலையின்  ஏறாவூர் கிளையினுடைய தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கான தன்னம்பிக்கை வழுவூட்டும் பயிற்சி வழங்கப்பட்டது.

மனித மேம்பாட்டு அமைப்பின் தலைவர், எஸ். ஏ. முகம்மட் அஸ்லத்தின் வழிகாட்டலிலும் ,அமைப்பின் ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை பிராந்திய அமைப்பாளரான இஸட்.எப். சிஹானி, இஸட்.எப். சிமானி
ஆகியோர்களின் ஏற்பாட்டிலும் H&D தாதியர் பாடசாலையின்  ஏறாவூர் கிளையினுடைய முகாமையாளர் எம். யு. எப். றுஸ்னா அவர்களின் ஒருங்கிணைப்பிலும், தேசிய இளைஞர் படையணி வாழைச்சேனை பயிற்சி
நிலையத்தின் பொறுப்பதிகாரியான, லெப்டினன் கேர்ணல் எம். எச். எம்.ரவூப் அவர்களின் தலைமையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பயிற்றுவிப்பாளர் மேஜர் கே.எம். தமீம் அவர்களினால் தாதிய பயிற்சி பாடசாலை மாணவர்களிற்கு விரிவுரைகளும், பயிற்சிகளும், பலகளச் செயற்பாடுகளும் வழங்கப்பட்டது.  அன்று மாலை இடம்பெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி லெப்டினன் கேர்ணல் எம். எச். எம்.ரவூப் அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.