ச தொச விற்பனை நிலையம் அக்கரைப்பற்றிலேயே இயங்க இணக்கம்.





வி.சுகிர்தகுமார் 0777113659 
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைந்திருக்கும் சதொச விற்பனை நிலையத்தை அகற்றவிடாது தடுத்த ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் சங்கம், அக்கரைப்பற்று தெற்கு தமிழர் ஒன்றியம் உள்ளிட்ட நலன் விரும்பிகள் அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் மட்டத்திற்கும் பிரச்சினையை கொண்டு சென்றனர்.
இதுவரை காலமும் சதொச விற்பனை நிலையம் அமைந்திருந்த கட்டடத்தின் ஒப்பந்த காலம் நிறைவடைந்தமை தொடர்பிலும் குறித்த நிலையம் வேறு பிரதேசத்திற்கு மாற்றப்படவுள்ளமை தொடர்பிலும் கடந்த வாரமே ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பபாகரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் பிரதேச செயலாளர் தலைமையிலான செயலக உத்தியோகத்தர்கள் சதொச நிலையத்தின் அதிகாரிகளை அழைத்து பொருத்தமான சில இடங்களை காண்பித்ததுடன் அவற்றில் ஓர் இடத்தினை தெரிவு செய்து பல இழுபறிகளுக்கு பின்னர் ஒப்பந்தம் செய்யும் நிலைக்கு கொண்டு சென்றனர். இதேநேரம் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் கவனத்திற்கும் சிலர் கொண்டு சென்று உரிய இராஜாங்க அமைச்சரான வியாழேந்திரன் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதனை அறிந்து கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் சங்கத்தினர் அக்கரைப்பற்று தெற்கு தமிழர் ஒன்றியம் ஒன்றிணைந்து அதனை தடுப்பதற்கான முயற்சியினை முன்னெடுத்ததுடன் அவர்களும் பல்தரப்பட்ட அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதேநேரம் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து சதொச நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அங்கிருக்கும் உபகரணங்களை அகற்ற விடாது தடுத்தனர்.
இது இவ்வாறிருக்க சதொச நிலை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரின் கவனத்திற்கும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளர்களினால் கொண்டு செல்லப்பட்டு சதொச உயர்; அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


 ஊர்த்திகள் அனுப்பப்பட்டிருந்தது. இதனை அறிந்து கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச வர்த்தகர் சங்கத்தினர் அக்கரைப்பற்று தெற்கு தமிழர் ஒன்றியம் ஒன்றிணைந்து அதனை தடுப்பதற்கான முயற்சியினை முன்னெடுத்ததுடன் அவர்களும் பல்தரப்பட்ட அரசியல் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதேநேரம் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் சம்பவ இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து சதொச நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடி அங்கிருக்கும் உபகரணங்களை அகற்ற விடாது தடுத்தனர்.
இது இவ்வாறிருக்க சதொச நிலை தொடர்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரின் கவனத்திற்கும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் பாரளுமன்ற உறுப்பினர் வீரசிங்க உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச அமைப்பாளர்களினால் கொண்டு செல்லப்பட்டு சதொச உயர்; அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் பின்னராக பொருட்களை ஏற்றுவது நிறுத்தப்பட்டு பார ஊர்தி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதுடன் புதிய இடத்தில் சதொச விற்பனை நிலையத்தை திறப்பதற்குரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.
மக்களின் நலன் நிறைந்த இப்பணியில் கட்சி அரசியலுக்கப்பால் அனைவரும் ஒற்றுமைப்பட்டு செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது