யானை தாக்கியதில், ஒருவர் உயிரிழப்பு



 வி.சுகிர்தகுமார் 0777113659 

 திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சாகாமம் பிரதேசத்தில் யானையின் தாக்குதலுக்குள்ளான ஒருவர் பலியானார்.

இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தம்பிலுவில் 02 பிரதான வீதியை சேர்ந்த 67வயது மதிக்கத்தக்க கனகரெட்ணம் கங்காதரன் எனும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் திருக்கோவில் சாகாமம் பகுதியில் உள்ள  வயல் காணியில் காவல் கடமையில் 

யானை தாக்கியதில் தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த ககைரத்தினம் கங்காதரன் என்பவர் உயிரிழந்துள்ளார். வயலில் இரவு நேரத்தில் யானைக் காவலுக்குச் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவிக்கின்றனர்.