பெறா மகளின் திடீர் மரணச் செய்தியினால் துக்கம் தாங்காத சிறிய தாயும் உயிர் துறந்தார். அக்கரைப்பற்றில் சோகம்




 


வி.சுகிர்தகுமார் 0777113659  


 பெறா மகளின் திடீர் மரணச் செய்தியினால் துக்கம் தாங்காத சிறிய தாயும் மரணமடைந்த சோக நிகழ்வொன்று அக்கரைப்பற்றில் இன்று(03) இடம்பெற்றுள்ளது.
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு கிராம உத்தியோகத்தர் பிரிவில் வசித்துவந்த சுந்தரலிங்கம் கமலா எனும் 59 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தயார் கடந்த 01 ஆம் திகதி தீடிர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தார்.
மரணச்செய்தி அறிந்து வீட்டிற்கு சென்ற 85 வயதுடைய அவரின் சிறிய தயார் அருளப்பு தங்கம்மா துக்கம் தாளாமல் மயக்கமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவர் நேற்று(02) மாலை உயிரிழந்த நிலையில்  நல்லடக்கம் இன்று(03) காலை அக்கரைப்பற்று இந்து மயானத்தில் இடம்பெற்றது.
உயிரிழந்த பெறா மகள் சிறுவயது முதல் சிறிய தயாருடன் பாசத்துடன் வளர்ந்;து வந்த நிலையில் மகளின் மரணம் செய்தியின் தாக்கம் காரணமாக மறுகணமே சிறிய தயாரும் உயிரிழந்தமை இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த இருவரது உடல்களும் மயானத்தில் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டமை
 குறிப்பிடத்தக்கது.