இரண்டு விருதுகளை வென்றது, காத்தான்குடி





(B.M.பயாஸ்)

ஜனாதிபதி விருதுபெற்ற பஹிமா சுக்ரிக்கு சிறந்த தொழில் முயற்சியாளருக்கான மற்றுமொரு விருது.
அல்ட்ரா அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனத்தின் தவிசாளர் உணைஸ் சிறந்த தொழில் முயற்சியாளருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
இலங்கை சாதனை மன்றம் நடாத்திய விருது வழங்கல் விழா கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்றது.
பல்துறைகளில் உள்ள சாதனையாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
கைத்தொழில் அதிகாரசபையின் வியாபார மேம்படுத்தல் உத்தியோகத்தர் நா.கோகுலதாஸ் இன் வழிகாட்டலில் சிறந்த தொழில் முயற்சியாளர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது.
காத்தான்குடியை சேர்ந்த பஹிமா சுக்ரி (SF மொடலிங் & கார்மண்ட் ) மற்றும் அக்பர் முஹம்மட் உனைஸ் (அல்ட்ரா அலுமினியம் பிறைவட் லிமிடட் நிறுவனம்) ஆகிய இரண்டு நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்டு விருதுகளும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மருத்துவம், புத்தாக்கம், பொலிஸ் சேவையில் பெண் அதிகாரியின் அதிஉச்ச கடமை என பல்துறைகளில் உள்ள ஆளுமைகள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இவ்விருது வழங்கல் விழாவில் பிரதம அதிதியாக பேராசிரியர், கலாநிதி. மது கிருஷ்ணன் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் AUGP / UNUGP USA இன் தலைமை அதிகாரியும் தலைவர் நிறுவனர்,
கலாநிதி பினா காந்தி தியோரி
(துணை இயக்குநர் சார்க் ஆராய்ச்சி
கலாச்சார மையம் - ஸ்ரீலங்கா),
பாராளுமன்ற உறுப்பினர் ராமேஸ்வரன், இலங்கை அழகி வியானா பீட்டர்ஸ் மற்றும் இலங்கை சாதனையாளர் மன்றத்தின் உறுப்பினர்கள், மனித உரிமை அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.