கிழக்கு மாகாணத்தில் முதலிடம்




 


(வி.ரி.சகாதேவராஜா)


2023 நடைபெற்ற அகில இலங்கை சிறுவர் சித்திரப் போட்டியில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனைக்கு உட்பட  இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியில் ஆறாம் தரத்தில் கல்வி பயிலும்
அப்துல் முனாப் பாத்திமா நுஸைபா கிழக்கு மாகாண மட்டபோட்டியில் பங்கு பற்றி முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இதன் மூலமாக இவர் தேசியமட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

இவர் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் சித்திர பாட வளவாளராக சேவையாற்றும் இறக்காமத்தைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ.முனாவ்வின் புத்திரி ஆவார்.