இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி





 இம்மாத இறுதியில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி:


நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல் நேற்றும் இன்றும் காணப்பட்ட மழையுடனான காலநிலை இன்றுடன் முடிவடைந்து, பெரும்பாலும் நாளை முதல் அதாவது 20ஆம் திகதி முதல் சில நாட்களுக்கு சீரான கால நிலை பெரும்பாலும் நிலவும்.


அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதியளவில் சிங்கப்பூர், மலேசியா பிராந்தியங்களில் இருந்து அந்தமான் தீவு பகுதிக்கு வருகின்ற மேலும் ஒரு புதிய காற்று சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து, எதிர்வரும் 28, 29, 30ஆம் திகதியளவில் இலங்கையின் தெற்காக மாலைதீவு நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதன் காரணத்தினால் எதிர்வரும் 28, 29, 3030ஆம் திகதி அளவில் மீண்டும் இலங்கைக்கு மழை கிடைப்பதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது. 


வரும் நாட்களில் இது தொடர்பாக மேலதிக தகவல்களை உங்களுக்கு வழங்குகின்றேன்.


(வானிலை அடிக்கடி மாறக்கூடியது என்பதனையும் தயவு செய்து கவனத்தில் கொள்ளவும்)


-கே.சூரியகுமாரன்

(ஓய்வுபெற்ற சிரேஷ்ட மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி)