மாவட்ட சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்





வி.சுகிர்தகுமார் 0777113659 


  திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரத்தை சேர்ந்த பகிரதன் சுகிர்தன் (சிவஸ்ரீ பகிரத சுகிர்தர சர்மா )
அம்பாரை மாவட்ட சமாதான நீதவானாக பொத்துவில் மாவட்ட நீதவான் நீதி மன்றத்தின் நீதிபதி முன்னிலையில் கடந்த 24ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
 1990 ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி விநாயகபுரத்தில் பகிரதன் சோதிமணி தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர் தனது கல்வியினை திகோ. விநாயகபுரம் மகா வித்தியாலயத்தில் பயின்று இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.
பின்னர் தேசிய இளைஞர் படையணியின் சியம்பலாந்துவ பயிற்சி கல்லூரியில் தமிழ் பாட ஆலோசகராக கடமையாற்றுவதுடன் இந்து மதகுருவாக திருக்கோவில் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளiயார் ஆலயம் , திருக்கோவில் ஸ்ரீ காயத்ரி அம்மன் ஆலயம் , கோமாரி முத்து விநாயகர் போன்ற ஆலயங்களில் பிரதமகுருவாகவும் பணி புரிந்ததுடன் தற்போது பொத்துவில் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் பிரதமகுருவாக இறைசேவையாற்றி வருகின்றார்.
மேலும் ஆன்மீக ரீதியாக இந்து தர்மாசிரியர் , இளம் சைவப்புலவர்  போன்ற கல்வித்தகைமை பட்டங்களையும் பெற்று விளங்கும் இவர் சமூக சேவையாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.