ஊருக்குள் புகுந்த முதலை




 


.(சுகிர்தகுமார்) 0777113659  


 அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருக்கோவில் 03 பிரதேசத்தில் நேற்று(22) இரவு ஊருக்குள் புகுந்த முதலை ஒன்றை பிரதேச வாசிகள் மடக்கி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஊருக்குள் புகுந்த முதலை தொடர்பில் பொலிசாருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்கள் அறிவித்தனர்.
குறித்த இடத்திற்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் உதவியுடன் முதலையினை பிடித்து பாதுகாப்பான முறையில் அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.

இதேநேரம் இவ்வாறன சம்பவங்கள் திருக்கோவில் பிரதேசத்தில் பல பகுதிகளில் இடம்பெற்று வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

அருகில் குளக்கரைகள் உள்ளமையினால் அங்கிருக்கும் முதலைகள் ஊரை நோக்கி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனா.
இதற்கு சரியான நடவடிக்கையினை மேற்கொண்டு தீர்வினை பெற்றுத்தருமாறு  பிரதேச மக்கள் தெரிவித்தனர்.....