முஷாரப் எம்.பி நீக்கப்பட்ட முறைமை தவறானது




 


அகில இலங்கை மக்கள் காங்கிரசிலிருந்து முஷாரப் எம்.பி நீக்கப்பட்ட முறைமை தவறானதென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானதென தெரிவித்து முஷாரப் எம்.பி தாக்கல் செய்திருந்த மனு நீதியரசர்கள் ஷிரான் குணரத்ன , பிரியந்த ஜயவர்தன , அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் நீண்டகாலம் ஆராயப்பட்டது. அதன் தீர்ப்பே இன்று வழங்கப்பட்டது.