மோட்டார் வாகன விபத்து




 


நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக சற்று முன்னர் மோட்டார் வாகன விபத்து இடம்பெற்றது.


03-02-2024(சனிக்கிழமை)


நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான மெயின் வீதியினை நோக்கி சற்று நேரத்திற்கு முன்னர் நான்கு இளைஞர்கள் இரு மோட்டார் சைக்கிள் மூலம் ரேஸ் ஓடியதற்கினங்க,வேகக் கட்டுப் பாட்டினை இழந்து பயனித்தமையால், ஜும்ஆ பள்ளிவாசல் முன்வாயல் சுவர் பகுதியில் மோதுன்டு, இரு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அநுமதிக்கப் பட்டுள்ளார்.


இவர்கள் நிந்தவூர் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் என அறியக் கிடைத்துள்ளது.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலீசார் மேற்கொண்டு வருகின்றன