பொதுக்கூட்டம் 23இல்





( வி.ரி. சகாதேவராஜா)
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 23 ஆம் தேதி  தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி தலைமையில்  மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள தமிழ்ச்சங்க மண்டபத்தில்  நடைபெறும்.

அது தொடர்பான செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராசா  சென்ற கூட்டறிக்கை வாசிக்க ஆரம்பமானது.

சங்கத்தின் பொருளாளர் க..தியாகராஜா  பொருளாளர் அறிக்கை முன்வைக்கப்பட்டது.

 மட்டக்களப்புத் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் அமரர் ஆ.மு.சி. வேலழகனது நூல் வெளியீடு மற்றும் நினைவுப் பேருரை பற்றிய தீர்மானமெடுக்கப்பட்டது.

 சங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் சார்ந்த கருத்துக்கள் செயற்குழு உறுப்பினர்களால்  முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டன.  சங்க பொதுச்செயலாளரின் நன்றியுரையுடன்  நிறைவுற்றது.