நூருல் ஹுதா உமர்
கிழக்கு பிராந்திய முன்னணி மற்றும் மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழகத்தின் தலைவர் அல்ஹாஜ் கலீல் முஸ்தபா அவர்களினால் கோல்ட் மைன்ட் கிரிகெட் கழகத்தினருக்கு புதிய சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் என்பனவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு மருதமுனை பிரதான வீதி முஸ்தபா ட்ரேட் காம்ப்ளக்சில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மருதமுனை கோல்ட் மைண்ட் விளையாட்டு கழகத்தின் ஸ்தாபகரும், ஓய்வுநிலை மாவட்ட காணி பதிவாளருமான முஸத்திக் ஜே முஹம்மட், கழக நிறைவேற்று பணிப்பாளர் ஆசிரியர் எம்.பி.எம்.ரசீட், கழக செயலாளர் அதிபர் எம்.சி.ஏ.நஸார், பொருளாளர் ஏ.எம். றியாஸ் ஆசிரியர் மற்றும் பயிற்றுவிப்பாளர் எஸ்.எம். நுபைஸ், ஆர்.எம்.றிஸாப், அணித் தலைவர் ஜே.எம்.சாதிர், கிங்ஸ் லெவன் அணியின் செயலாளர் இசட்.எம். ஹுசைன், மற்றும் அணியின் சிரேஷ்ட வீரர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)

Post a Comment
Post a Comment