பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளருக்கு நேர்ந்த விபத்தின் கடைசி நிமிட காட்சிகள்!



 


பா.ர,ஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படத்தின் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். படப்பிடிப்பில் நடந்த விபத்துக்குப் பிறகு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

விக்ரமின் 'தங்கலான்' படத்திற்கு பின், 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார் ரஞ்சித். தமிழகத்தின் பல இடங்களில் அதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் நீலம் production தயாரிப்பில் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 10.07.25 முதல் நடைபெற்று வருகிறது.
இதில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம், செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மோகன்ராஜ் (52) என்வர் திரைப்பட சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். படப்பிடிப்பில், காரிலிருந்து குதிக்கும்போது சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் தவறி விழுந்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.