(செங்கலடி நிருபர் சுபஜன்)
செங்கலடி பிரதேச சபையின் தீர்மானத்தை மீறி - ஞாயிறு வகுப்பு நடாத்திய தனியார் கல்வி நிலையங்களுக்கு தவிசாளர் திடீர் விஜயம்!
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் தீர்மானத்தை மீறி ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்பு நடாத்திய 06 கல்வி நிலையங்களுக்கு இன்று காலை திடீர் விஜயம் ஒன்றை ஏறாவூர் பற்று செங்கலடி தவிசாளர் மு.முரளிதரன் மேற்கொண்டுள்ளார்.
ஞாயிறு தினங்களில் இந்து ஆலயங்களில் இடம்பெறும் அறநெறி வகுப்பு மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு பாடசாலை மாணவர்கள் செல்லுதல் உள்ளிட்ட கோரிக்கைக்கு அமைய மாணவர்களுக்காக ஞாயிறு தினங்களில் முழு நாள் வகுப்பு தடை மேற்கொள்ளுமாறு செங்கலடி பிரதேச சபையினால் தீர்மானம் அன்மையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த பிரதேச சபையின் தீர்மானத்தை மீறி இன்று 31-ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வகுப்புக்களை நடாத்திய தனியார் கல்வி நிலையங்களை சென்று பார்வையிட்ட தவிசாளர் - நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதே வேளை இன்றைய தவிசாளர் உள்ளிட்ட குழுவினரின் தனியார் கல்வி நிலையங்களின் விஜயத்தின் போது - மாணவர்களின் நலன் கருதி விடுமுறை வழங்குமாறும் , பிரதேச சபையுடன் தொடர்புகொண்டு வகுப்பு நடாத்த வேண்டிய தேவை இருப்பின் அது தொடர்பில் கலந்துரையாடும்படியும் கேட்டுக்கொண்டுள்ளதுடன், கல்வி நிலையங்களை பதிவு செய்யும் நடவடிக்கை தொடர்பிலும் கவணம் செலுத்துமாறும் தவிசாளர் கல்வி நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும் தொடர்ச்சியாக இவ்வாறு தனியார் வகுப்பு நடாத்தும் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு பிரதேச சபை செல்லும் எனவும் தவிசாளர் மு.முரளிதனர் தெரிவித்துள்ளார்.
(செங்கலடி நிருபர் சுபஜன்)


Post a Comment
Post a Comment