( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட மட்ட இளைஞர் கழக வலைப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி அம்பாறை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இறுதிப் போட்டியில் காரைதீவு அணியும் அட்டாளைச்சேனை அணியும் மோதின.
அதில் 4:1 என்ற கோல் வித்தியாசத்தில் காரைதீவு அணி வெற்றி பெற்றது.
காரைதீவு பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய இராமகிஷ்ணா இளைஞர் கழக அணி வலைப்பந்தாட்ட போட்டியில் 2025 ம் ஆண்டின் மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.


Post a Comment
Post a Comment