நூருல் ஹுதா உமர்
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் சில மாதங்களாக கணித பாடத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர் இல்லாத காரணத்தினால் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று மட் /மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.
மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கான கொடுப்பனவை இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும் அவுஸ்திரேலிய நகையக உரிமையாளரான திரு. பாக்கியராசா அவர்களால் வழங்கப்படுகின்றது. மேலும் மட்/மமே/ வெலிக்ககண்டி விபுலானந்தா வித்தியாலயம் மற்றும்மட்/மமே/ மாவலையாறு கைலான் வித்தியாலயங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment