காஷ்மீரில் போராட்டம் - 12 பேர் உயிரிழப்பு




 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் முசாபராபாதில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.


இதனால் அங்குள்ள சந்தைகள், கடைகள் மற்றும் உள்ளூர் வணிகங்கள் முழுமையாக மூடப்பட்டன. போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.


அப்போது நடந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


போராட்டங்கள் கடந்த 72 மணி நேரமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை முடக்கி உள்ளன.