மன்னார், சொகுசு பேருந்து,விபத்து, பலர் காயம்



 


🔴 கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி சென்ற சொகுசு பேருந்து மதவாச்சிக்கும் மன்னாருக்கும் இடையில் விபத்து, பலர் காயம்!


கொழும்பிலிருந்து மன்னார் நேற்று செவ்வாய்க்கிழமை (21) நள்ளிரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று மன்னார் - மதவாச்சி பிரதான வீதியின் பெரிய கட்டு பகுதியில் இன்று அதிகாலை விபத்திற்குள்ளாகியுள்ளது.


சாரதியின் நித்திரை கலக்கம், விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


குறித்த விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், சம்பவ இடத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.