யாழ், உரும்பிராய் வடக்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானதன் விளைவாக உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த இளைஞர் வட்டிக்கு பணம் வாங்கி விளையாட்டுக்கான கட்டணத்தை செலுத்தி விளையாடியுள்ளார்.
கடன் பணம் வட்டியும் முதலுமாக ஒரு கோடியைத் தாண்டிய நிலையில், அவரது தாயார் காணியை விற்பனை செய்து அந்தக் கடனில் இருந்து அவரை மீட்டுள்ளார்.
பின்னர் மீண்டும் அந்த விளையாட்டை விளையாடுவதற்காக தாயாரிடம் 5 இலட்சம் ரூபா கேட்ட நிலையில் தாயார் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட மன விரக்தியால் கடந்த 25ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு செய்ய முயன்ற வேளையில் மரக்கிளை முறிந்து கீழே விழுந்து மயக்க நிலையில் காணப்பட்டார்.
இதனை அவதானித்த உறவினர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு (29) உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.


Post a Comment
Post a Comment