வாகனேரி பிரதான வீதியில் விபத்து சம்பவம்!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி பிரதான வீதியில் டிப்பரும் வேனும் மோதியுள்ளது.
இதில், பலர் காயமடைந்த நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவம் இன்று (23) மாலை இடம்பெற்றுள்ளது.
Kalkudah Nation
விபத்துக்குள்ளான இந்த வேனின் சாரதி சேனபுர (வெளிகந்த )என்று சொல்லப்படுகின்றது. (மர்சூக் ,மன்சூர் இரட்டையர்களில் ஒருவர்)
சாய்ந்தமருதில் திருமனம் முடித்து,CCTV தொழில் செய்யும் சகோதர் என வியுஹம் TV ஜனூஸ் BRO தகவல் சொன்னார்.
(செய்தி விபரம் கீழே உள்ளது)
சற்று முன் வாழைச்சேனை வாகனேரி சந்தியில் விபத்து: வேன் மீது டிப்பர் மோதியதில் பயணிகள் காயம்!
வாழைச்சேனை வாகனேரி சந்தியில் இன்று 23.10.2025 இடம்பெற்ற விபத்தில் டிப்பர் வாகனம் ஒன்று வேன் மீது மோதியதில் வேனில் பயணித்த பல நபர்கள் காயமடைந்துள்ளனர்.
பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இந்த விபத்துச் சம்பவத்தின் போது, விபத்துக்குள்ளான வேனில் பயணித்த நபர் ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் (Driving License) மீட்கப்பட்டுள்ளது. இந்த சாரதி அனுமதிப்பத்திரத்தின் விபரம் தெரிந்தவர்கள் அல்லது உரிய நபரின் உறவினர்கள் இருப்பின், வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது அருகில் உள்ள அதிகாரிகளுக்கோ தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் -
கல்குடா அனர்த்த அவசர சேவை
COPY :-MCA ஸமட் MPS.JP)


Post a Comment
Post a Comment