பிரஜாசக்தி, தவிசாளர்களுக்கான நியமனம்




 'பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்கான   குழுக்களின் தவிசாளர்களுக்கான  நியமனம் வழங்கும் நிகழ்வு!!


ஜனாதிபதி அவர்களின் எண்ணக்கருவில் உதித்த கிராமிய அபிவிருத்தி சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில்  'பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்கான தேசிய இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான  குழுக்களின் தவிசாளர்ளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (06.11.2025) வியாழக்கிழமை மாலை அக்கரைப்பற்றில் அம்பாறை மாவட்ட கரையோர பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், கெளரவ நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.


பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான  'பிரஜாசக்தி' வறுமை ஒழிப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள தவிசாளர்கள்  இணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தல்  நடைமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.


இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர், இணைப்பாளர் தேசிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்பாளர்களான தோழர் றமீஸ் மற்றும் அபு ஷஹீட்  என பலரும் கலந்து கொண்டனர்.