அத்தனகலு ஓயா ஆற்றுப் படுகைக்கு நேற்று (23) காலை 6.00 மணிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளாதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் அவ் வழியாக செல்லும் வாகன சாரதிகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
ஆற்றங்கரைக்கு அருகிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதும் தாழ்வான பகுதிகளில் பயணிப்பதை தவிர்ப்பதும் சிறந்தது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள அபாயம் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீர்ப்பாசனத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Post a Comment
Post a Comment