L
நூருல் ஹுதா உமர்
இலங்கையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அடித்தளமாக குழந்தைகள் மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமாக மாறியுள்ளது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும், நாட்டில் ஒருகாலத்தில் “அரகல” என அழைக்கப்பட்ட மக்கள் எழுச்சியை விடவும் வேகமாக, தற்போதைய சூழலில் ஒரு புதிய ஆன்மிக–சமூக எழுச்சி பரவி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த எழுச்சியின் மையமாக, மார்க்க போதனைகளின் மூலம் மனிதநேயத்தையும் கருணையையும் வலியுறுத்தி வரும் கண்ணொருவ தேரர் திகழ்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்
எதிர்காலத்தில் தடைகள் உருவாகுமா என்ற கேள்வியும் எழுகின்றதாக அவர் கவலை வெளியிட்டார்.
இவ்வாறான சமூக மாற்றங்கள் உருவாகும் இந்நேரத்தில், வரும் காலத்தில் எமது குழந்தைகள் அனைவரும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர்களாக வளர வேண்டும். அதனை உறுதி செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றும் எஸ்.எம். சபீஸ் வலியுறுத்தினார்.


Post a Comment
Post a Comment